பிப்ரவரி 1ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டதற்கு என்ன காரணம்? பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், அந்த நிதியாண்டிற்கான புதிய பட்ஜெட்டை அமல்படுத்த நிறைய நேரம் எடுக்கும். ஆனால், பிப்ரவரி தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், பட்ஜெட்டை விரைவாக அமல்படுத்த முடியும். மேலும், ஆங்கிலேயர்களின் நடைமுறையைப் பின்பற்றாமல், நமக்கென தனிப்பட்ட வழிமுறைகள் உருவாக்கவும் இது வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.


