சில விமான விபத்துகளும் அதற்கான காரணமும் மர்மமாகவே இருக்கும். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த மலேசியா விமான விபத்தைக் கூறலாம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விமானத்தின் சில பகுதிகள் கடலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதே போன்ற ஒரு விமான விபத்துக்கான அதிர்ச்சிக் காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது. 1994-ம் ஆண்டு மார்ச் 23 அன்று, ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து, சீனாவின் ஹாங்காங்கிற்குச் சென்ற ஏரோஃப்ளோட் 593 விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 75 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் கடந்த 30 ஆண்டுகளாக வெளிப்படுத்தபடாமலே இருந்தது. இந்த நிலையில், Simple Flying செய்தி நிறுவனம் அந்த விபத்துக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டிருக்கிறது. ஏரோஃப்ளோட் 593 விமானத்தில், 12 விமான ஊழியர்கள், 63 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தை விமானி யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கி, கேப்டன் ஆண்ட்ரே டானிலோவ் ஆகியோர் இயக்கினர். இதில் விமானி யாரோஸ்லாவ் குட்ரின்ஸ்கி அவருடைய 15 மகனையும், 12 வயது மகளையும் அழைத்து வந்திருக்கிறார்.

