Last Updated:
பஹல்காம் தாக்குதலில் உயிர்நீத்த குதிரையோட்டி ஆதில் உசேன் ஷாவுக்கு ஜம்மு & காஷ்மீர் அரசு பதக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி கௌரவித்தது.
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க போராடி, பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான உள்ளூர் குதிரையோட்டி ஆதில் உசேன் ஷாவுக்கு ஜம்மு & காஷ்மீர் அரசு பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது.
ஜம்மு & காஷ்மீர், பெஹல்காம் சுற்றுலாத்தளத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி நடத்திய பயங்கரவாதிகள் தாக்குதலில் காஷ்மீர் குதிரையோட்டி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய அரசு, பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதுமட்டுமின்றி, ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத நிலைகளை தகர்த்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய இராணுவப் படை வழியிலேயே வழிமறித்து தகர்த்தது.
இரு நாட்டுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழலில் தொடர்ந்து சண்டைகள் நடந்துவந்த நிலையில், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 77 ஆவது குடியரசுத் தினம் கொண்டாட்ட நிகழ்வில் மாநில அரசும், இந்திய அரசும் பல்வேறு தரப்பினருக்கும் விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
அந்தவகையில் காஷ்மீர், பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று, பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான உள்ளூர் குதிரையோட்டி ஆதில் உசேன் ஷாவுக்கு ஜம்மு & காஷ்மீர் அரசு வீரச் செயலுக்கான பதக்கம் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
Jammu and Kashmir
பஹல்காம் தாக்குதலில் மக்களைக் காக்க உயிர்நீத்த குதிரையோட்டி! குடியரசு தினத்தில் கௌரவித்த ஜம்மு & காஷ்மீர் அரசு


