Last Updated:
இதுவரை 4 முறை இந்த தொடர் நடந்துள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்று சாதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA T20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
நேற்று கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிடோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் டெவால்ட் ப்ரெவிஸ் 56 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர் குவின்டன் டி காக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமலும், ஜோர்டன் ஹெர்மன் 3 ரன்களிலும், ஜேம்ஸ் கோல்ஸ் 1 ரன்னிலும் வெளியேறினர்.
பின்னர் இணைந்த மேத்யூ பிரிட்ஸ்கி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூ 68 ரன்களும், ஸ்டப்ஸ் 63 ரன்களும் எடுத்தனர்.
19.2 ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சன் ரைசர்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 3 ஆவது முறையாக SA T20 தொடரை வென்றுள்ளது.


