Last Updated:
தேர்தல் நடைமுறைகளைத் துல்லியமாகவும், பொறுப்புடனும் பொதுமக்களுக்குக் காட்டியது உள்ளிட்டவைக்காக நியூஸ் 18-க்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தேர்தல் ஒளிபரப்பிற்காக சிறந்த செய்தி சேனல் விருது, நெட்வொர்க் 18 குழுமத்தின் நியூஸ்18 பிகாருக்கு வழங்கப்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த பிகார் மாநில தேர்தலில் போலி தகவல்கள் மற்றும் தவறான தகவல்களை திறம்பட எதிர்த்து போராடியதோடு, வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒளிப்பரப்பியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதை இன்று வழங்கினார்.
பீகார் தேர்தலின்போது, தேர்தல் நேரத்தில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளைத் தடுத்து, மக்களுக்கு உண்மையான விபரங்களைக் கொண்டு சேர்த்தது.
மக்கள் அதிக அளவில் ஜனநாயகக் கடமையாற்றவும், நேர்மையான முறையில் வாக்களிக்கவும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டது மற்றும் தேர்தல் நடைமுறைகளைத் துல்லியமாகவும், பொறுப்புடனும் பொதுமக்களுக்குக் காட்டியது உள்ளிட்டவைக்காக நியூஸ் 18-க்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதற்கான விருதினை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். அதனை நியூஸ்18 பீகார்-ஜார்க்கண்ட் சார்பாக அதன் மாநில ஆசிரியர் பிரஜ் மோகன் சிங் பெற்றுக் கொண்டார்.
பீகார் தேர்தலின்போது மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளை வழங்குவதில் நியூஸ் 18 முதன்மை வகித்தது. மேலும் கள செய்திகள், கருத்துக்கணிப்பு பகுப்பாய்வாக போன்றவற்றில் நியூஸ் 18 அளித்த தகவல்கள் மக்களால் அதிகம் நம்பப்பட்டன.
நியூஸ் 18-க்கு விருது வழங்கி கவுரவித்த குடியரசு தலைவர் முர்மு.. தேர்தல் ஒளிபரப்பை சிறப்பாக வழங்கியதற்கு பாராட்டு


