Last Updated:
குடும்ப சூழல் காரணமாகக் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலை தேடி தெனாலி நகரத்துக்குச் சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரி கணேஷுடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது தகாத உறவாக மாறியது.
ஆந்திராவில் தகாத உறவை தட்டி கேட்டதால் கணவனை, மனைவியே கொலை செய்துள்ளார். காதலை ஏவி கணவனைத் தீர்த்துக்கட்டிய சம்பவத்தின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள துருவோலு கிராமத்தைச் சேர்ந்த டேகல சின்னா – கொண்டம்மா தம்பதியருக்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 12 வயதில் மகன் இருக்கிறார். குடும்ப சூழல் காரணமாகக் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலை தேடி தெனாலி நகரத்துக்குச் சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரி கணேஷுடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது தகாத உறவாக மாறியது.
இந்த விஷயம் தெரிந்த கணவன் சின்னா, மனைவியை எச்சரித்து பிழைப்பு போனால் போகிறது, மனைவிதான் வேண்டும் என நினைத்து, உடனே சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். ஆனால் ஊருக்கு சென்ற பின்னரும் கொண்டம்மா, செல்போன் மூலம் கள்ளக்காதலன் கணேஷுடன் தொடர்பில் இருந்து வந்தார். மேலும், கணவனுடன் வேண்டுமென்றே அடிக்கடி தகராறு செய்து சண்டை போட்டு குடும்பத்தின் நிம்மதியைக் கெடுத்து வந்தார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான சின்னா, தினமும் ரோதனையிலேயே நாட்களைக் கடத்தினார்.
ஆனால் கொண்டம்மா தனது லீலையை தொடர்ந்து வளர்த்து கொண்டே வர, ஒருகட்டத்தில் இருவரின் உறவுக்கும் தடையாக இருப்பதாக எண்ணி தனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த 14 ஆம் தேதி கள்ளக்காதலன் கணேஷ் தனது உறவினர் சிவகுமாருடன் சேர்ந்து, காதலியின் கணவரைக் கொலை செய்ய ஊருக்குள் பதுங்கினார். அன்று கணவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற தகவலை கொண்டம்மா, காதலன் கணேஷுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.
உடனே அலர்ட்டாகி சின்னா சென்று கொண்டிருந்த வழியில் தயாராகக் காத்திருந்த கணேஷ், சிவகுமார் இருவரும் அவரது வண்டியை வழிமறித்து கட்டையால் அடித்துத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை சாலை விபத்தாக திசை திருப்ப திட்டமிட்டு சின்னாவின் உடலைச் சாலையின் நடுவே வண்டியில் மேல் போட்டு விபத்தைப் போல சித்தரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து தங்களுடைய திட்டத்தின் படி கொண்டம்மா தன் கணவரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து நாடகம் ஆடினார்.
உடனே சின்னாவை தேடிய போலீசார் அவருடைய உடல் சாலையில் கிடந்ததை அறிந்து அதனைக் கைப்பற்றி சாலை விபத்தில் சின்னா இறந்து விட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் சின்னா, உடல் மீது இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூடவே கொண்டம்மாவின் பேச்சிலும் குதர்க்கம் இருந்தது. அதனால் கொண்டம்மாவின் செல்போனை வாங்கி தீவிர விசாரணை மேற்கொண்டபோது கொண்டம்மா, மேஸ்திரி கணேஷின் சீக்ரெட் உறவும், மர்டர் ப்ளானும் அம்பலமானது.
பின்னர் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்த, காதலனை வைத்து கணவனை தீர்த்துக்கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கொண்டம்மா, கணேஷ், சிவகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார் முழு விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். “குடி குடியை கெடுக்கும். தகாத உறவு குடும்பத்தையே அழிக்கும்” என்பதற்கு சின்னா மரணமும், கொண்டம்மாவின் கைதும் ஓர் உதாரணம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவை தெரிந்துகொண்ட கணவனுக்கு ஸ்கெட்ச்.. மனைவி செய்த கொடூர செயல்.. வாக்குமூலத்தில் வெளியான ட்விஸ்ட்!


