மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் நடந்தது.
மோதலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் அன்று இரவு விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில்,
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 46 மற்றும் 43 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். R

