உலகம் முழுவதுமே பெரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் தங்கள் சொந்த தொழிலை விரிவுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இந்தியாவிலும் பல கோடீஸ்வர முதலாளிகளின் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்துவதற்கு உதவியாக இருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்கும் இவர்கள் தொழிலை முன்பிருந்ததை விட அதிகமாக விரிவுப்படுத்துகிறார்கள். இதுபோல் பல நபர்களை உதாரணமாக காட்டலாம். அப்படியொருவர் தான் அனீஷா காந்தி திவாரி.
USV India நிறுவனத்தின் தலைவரும் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவருமான லீனா திவாரியின் மகளே அனீஷா காந்தி திவாரி. தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான USV India நிறூவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இந்த நிறுவனத்தை 1961-ம் ஆண்டு ரெவ்லான் நிறுவனத்தோடு சேர்ந்து அனீஷாவின் தந்தை விதால் காந்தி தொடங்கினார். இது மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனமாகும்.
மூலக்கூறு உயிரியலாளரான (molecular biologist) அனீஷா, அடுத்த தலைமுறை வளர்ச்சி உயிரியல் குறித்து ஆராய்ச்சி செய்வதில் தேர்ந்த அணுபவம் உள்ளவர். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் USV India நிறுவன போர்டின் இயக்குனர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அனீஷாவும் அவரது தாயார் லீனாவும் மிக எளிமையான ஆடம்பரம் இல்லா வாழ்க்கைமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.
லீனா திவாரியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.26,690 கோடி அளவிற்கு இருக்கும் என ஃபோர்பஸ் பத்திரிக்கை கூறுகிறது. 66 வயதாகும் லீனா இந்தியாவின் பணக்கார நபர்கள் பட்டியலில் 45-வது இடத்தில் உள்ளார்.
இவருடைய மகள் அனீஷா Curve Biosciences நிறுவனத்தின் ஆய்வக துறையின் தலைமை பொறுப்பில் சில காலம் இருந்தார். அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைகழகத்தில் மாலிகுலர் பயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் பட்டம் பெறுள்ள அனீஷா, கேம்ப்ரிட்ஜில் உள்ள MIT (Massachusetts Institute of Technology) கல்லூரியில் மூலக்குறு உயிரியல் துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார். இவருடைய LinkedIn புரொஃபைலில் டாடா இன்ஸ்ட்டிடுயூட் ஆஃப் ஃபண்ட்மெண்டல் ரிசர்ச் மையத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவாக பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Also read |
ரூ.150 கோடி வருமானத்தை உதறிய பெண்… இன்று பல கோடி மதிப்பு சாம்ராஜ்யத்துக்கு அதிபதி… யார் இவர்?
USV India நிறுவனம் 511 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருவாய் ஈட்டி வருகிறது. தனியாருக்குச் சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனமான இது மும்பையில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் டயாபடீஸ் மற்றும் இதய நோய் தொடர்பான மருந்துகளை தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி API, பெப்டைடுகள், பயோசிமிலர், ஊசிகள் ஆகியவற்றையும் இவர்கள் தயாரித்து வருகிறார்கள். 2018-ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான Juta Pharma-வை USV India நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
