• Login
Monday, January 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்

GenevaTimes by GenevaTimes
January 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்   சந்தோஷ் ஜாவிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இ.தொ.காவை சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (18)  அன்று இந்தியா பயணமானார்கள்.


இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக்குழு இந்தியா செல்கிறது.


இச் செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இ.தொ.காவைச் சேர்ந்த மொத்தம் 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


இந்த செயலமர்வு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பரிந்துரையின் கீழ், இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக அமைகிறது. உள்ளூராட்சி நிர்வாக திறன்களை மேம்படுத்துதல், மக்கள் சேவை செயல்திறன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடைமுறை முன்னேற்றம் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.


செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 15 உறுப்பினர்களும், பதுளை மாவட்டத்தில் இருந்து 3 உறுப்பினர்களும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஒரு உறுப்பினரும், கண்டி மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் என மொத்தமாக 20 உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.


முன்னதாக கடந்த ஆண்டு(2025) ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி, நுவரெலியாவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜாவை சந்தித்த ஜீவன் தொண்டமான், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் நடைபெற உள்ள பயிற்சிப் பட்டறையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 20 உறுப்பினர்களுக்கு பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  



Read More

Previous Post

இக்பால் ஆட்கடத்தல் கும்பல் முறியடிப்பு; கிளந்தானில் குடிநுழைவுத்துறை அதிரடி | Makkal Osai

Next Post

EPFO | பி.எப்., பணத்தை இனி ஈசியா எடுக்கலாம்.. அவசர தேவைக்கு உடனடியாக பணம்.. எப்போது முதல் அமல் தெரியுமா? | வணிகம்

Next Post
EPFO | பி.எப்., பணத்தை இனி ஈசியா எடுக்கலாம்.. அவசர தேவைக்கு உடனடியாக பணம்.. எப்போது முதல் அமல் தெரியுமா? | வணிகம்

EPFO | பி.எப்., பணத்தை இனி ஈசியா எடுக்கலாம்.. அவசர தேவைக்கு உடனடியாக பணம்.. எப்போது முதல் அமல் தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin