Last Updated:
இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
விமான தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு ஏற்படுத்திய இன்னல்களுக்காக, மத்திய வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இண்டிகோ நிறுவனத்திற்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 3 முதல் 5ஆம் தேதி வரை இண்டிகோ விமான நிறுவன இயக்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு நடத்திய விசாரணையில் இண்டிகோ நிறுவனத்தின் 2,507 விமான சேவை ரத்து செய்யப்பட்டதையும் 1,852 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதையும் கண்டுபிடித்தது.
இதனால் பல்வேறு விமான நிலையங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்திற்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க 50 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை வழங்குமாறும் இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi


