Last Updated:
மும்பை மாநகராட்சியில் பாஜக-ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி 30 ஆண்டுகால உத்தரவ் தாக்கரே ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
மகாராஷ்டிராவில் 30 ஆண்டுகால உத்தரவ் தாக்கரேவின் ஆதிக்கத்தை தகர்த்து, பாஜக – ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி மும்பை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை, நவி மும்பை, புனே, தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வியாழன் அன்று மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், 25 மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் பெருவாரியான இடங்களை பாஜக-ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணியே கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 860க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரத்து 400க்கும் அதிகமான இடங்களை பாஜகவும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா சுமார் 400 இடங்களையும், மற்றொரு கூட்டணி கட்சியான அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் 160 இடங்களையும் வென்றுள்ளன. காங்கிரஸ் 324இடங்களில் வென்றுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மும்பை நம் தேசத்தின் பெருமை என்றும் லட்சியங்களின் நகரம் எனவும் பிரதமர் பதிவிட்டுள்ளார். வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருவரையும் எண்ணி பெருமை கொள்வதாகவும், நல்லாட்சி மற்றும் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த ஆசிர்வாதம் எனவும் பதிவிட்டுள்ளார்.
Mumbai,Maharashtra


