வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக
விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பொங்கல் விழா’ இன்று யாழ்ப்பாணம் வேலணை தெற்கு ஸ்ரீ
சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல்
பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

