PIB உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்ட தகவலின் படி, “ஆதாரை புதுப்பிக்கப்படாவிட்டால் SBI YONO ஆப் பிளாக் செய்யப்படும்” என்று கூறும் இந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை. மோசடி செய்பவர்கள் SBI வங்கி அதிகாரிகளாக நடித்து, வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் வாயிலாக லிங்க்-ஐ அனுப்புகின்றனர். அந்தச் செய்தியில், ஆதாரை புதுப்பிக்க ஒரு APK ஆப்பை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதை செய்யவில்லை என்றால் YONO ஆப் முடக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மோசடி குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள PIB உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, SBI ஒருபோதும் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் APK ஆப்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான லிங்குகளை அனுப்பாது என்று தெளிவுப்படுத்தியுள்ளது. இவ்வகையான தெரியாத லிங்குகளை கிளிக் செய்வதோ அல்லது கோப்புகளை பதிவிறக்குவதோ, பயனரின் மொபைல் போனில் ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருளை (malware) நிறுவக் காரணமாகலாம். இதன் மூலம் மோசடி செய்பவர்கள் வங்கி விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள், ஓடிபி-க்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகளை திருட முடியும்.
Is it true that your SBI YONO app will be blocked if you don’t update your Aadhaar❓
A message circulating on social media in the name of SBI claims that users must download and install an APK file to update their Aadhaar. It further claims that if Aadhaar is not updated, the… pic.twitter.com/wHf0KxCkk0— PIB Fact Check (@PIBFactCheck) January 6, 2026
அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களை தவிர்த்து, வெளிப்புற ஆப்களை இன்ஸ்டால் செய்வது மிகவும் அபாயகரமானது என்றும் அரசு எச்சரித்துள்ளது. இவ்வாறு இன்ஸ்டால் செய்யப்படும் போலியான ஆப்கள், பயனரின் வங்கிக் கணக்கு விவரங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள், பின்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டுகள் (OTP) போன்றவற்றை மோசடிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இத்தகைய செய்திகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான எந்த லிங்குகளையும் கிளிக் செய்யக்கூடாது என்றும், தெரியாத ஆப்களை ஒருபோதும் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யக்கூடாது என்றும் PIB பயனர்களை வலியுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் போலியான இந்த செய்திகளை உடனடியாக பிளாக் செய்து, report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கியும் (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான அதிகாரப்பூர்வப் பதிவில், மோசடி செய்பவர்கள் வங்கி ஆப் அல்லது KYC விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி போலி APK லிங்குகளைப் பரப்பி வருவதாக SBI தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்ட மோசடிகள் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.
Think before you click!
Fraudsters are sending fake APK links claiming to update your banking app.
It’s a scam to steal your money!Don’t click. Don’t download. Don’t update.
Download apps only from Play Store or App Store.
To report cybercrime: Call 1930@DFS_INDIA— State Bank of India (@TheOfficialSBI) October 16, 2025
வாடிக்கையாளர்கள் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான லிங்குகளையும் கிளிக் செய்யவோ, பதிவிறக்கவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ கூடாது என்றும் SBI அறிவுறுத்தியுள்ளது. மேலும், கணக்கு விவரங்கள், கார்டு எண்கள், பின்கள், ஓடிபி-க்கள் போன்ற முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பகிரப்படும் செய்தி உண்மையா என்பதில் சந்தேகம் இருந்தால், அதன் அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் அல்லது வலைத்தளம் வழியாக நேரடியாக SBI-யைத் தொடர்பு கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களே உஷார்…! ஆதார் இணைப்பு என்ற பெயரில் அரங்கேறும் மோசடி… சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்…?

