Last Updated:
டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வரும் புதன்கிழமை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமை டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அதற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் இருந்த பிரதமர் மோடி, திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi


