• Login
Saturday, January 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஸ்ரீதர் வேம்பு விவகாரத்து வழக்கு.. 15,000 கோடி பிணைத் தொகையை செலுத்த கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவு | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 9, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஸ்ரீதர் வேம்பு விவகாரத்து வழக்கு.. 15,000 கோடி பிணைத் தொகையை செலுத்த கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர் பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு. படிப்பில் படு சுட்டியான இவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1996-ஆம் ஆண்டு, கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து AdventNet என்ற நிறுவனத்தை தொடங்கினார்.. இதுவே பின்னாளில் ஜோஹோ-வாக மாறியது..

ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா ஸ்ரீனிவாசனுக்கு 1990-களின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற்றது. பிரமிளா ஸ்ரீனிவாசனும் ஒரு மென் பொறியாளர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஸ்ரீதர் வேம்பு, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் குடியேறினார். பின்னர், ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா ஸ்ரீனிவாசன் தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சொத்துக்களைப் பிரிப்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால், இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை.. ஸ்ரீதர் வேம்பு இந்தியா திரும்பியபோது, ஆட்டிசம் பாதித்த தனது மகனையும் தன்னையும் அமெரிக்காவில் நிதி ரீதியாகப் பாதுகாப்பற்ற நிலையில் விட்டுச் சென்றதாக பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தனக்கு தெரியாமல், ஜோஹோ நிறுவனத்தின் பங்குகளை ஸ்ரீதர் வேம்பு தனது குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கலிபோர்னியா சட்டப்படி திருமணத்திற்கு பின்னர் சேர்க்கப்படும் சொத்துக்களில் கணவன் மனைவி என இருவருக்கும் சரிபாதி உரிமை உள்ளது. பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாமஸ் நிக்ஸன், ஸ்ரீதர் வேம்பு “நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்று கூறினார்.. தனது சொத்துக்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்த முழுமையான மற்றும் உண்மையான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி கண்டித்தார்.

ஸ்ரீதர் வேம்பு தனது சொத்துக்களைத் தனது மனைவிக்குத் தெரியாமல் மறைப்பதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சொத்துக்கள் மேலும் பிரிக்கப்படுவதை தடுக்க இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடி ரூபாயை ஸ்ரீதர் வேம்பு நீதிமன்றத்தில் உத்தரவாதமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவின் நிதி விவகாரங்களை முழுமையாகக் கண்காணிக்க தற்காலிக அதிகாரியை நீதிபதி நியமித்துள்ளார். இந்த அதிகாரி ரீசிவர் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீதர் வேம்புவின் அமெரிக்க சொத்துக்கள் மற்றும் அங்குள்ள சோஹோ நிறுவனக் கிளைகளின் நிதி விவகாரங்களை நீதிமன்றம் நியமித்த அந்தப் பொதுவான அதிகாரிதான் மேற்பார்வை செய்வார்.

நீதிமன்ற அனுமதி இன்றி ஸ்ரீதர் வேம்பு பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாது. இந்த வழக்கின் தீர்ப்பு அல்லது சொத்துப் பகிர்வு குறித்த அடுத்தகட்ட நகர்வுகளில் இந்த ‘ரிசீவர்’ சமர்ப்பிக்கும் அறிக்கைகள் மிக முக்கியமானதாக இருக்கும். பொதுவாக அமெரிக்க நீதிமன்றங்கள் இவ்வளவு பெரிய அபராதத் தொகையையோ அல்லது பிணைத் தொகையையோ விதிப்பது அரிதிலும் அரிது.

Forbes இதழின் தரவுகளின்படி, 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்ரீதர் வேம்புவின் சொத்து மதிப்பு சுமார் ₹50,000 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஸ்ரீதர் வேம்பு விவகாரத்து வழக்கு.. 15,000 கோடி பிணைத் தொகையை செலுத்த கலிபோர்னிய நீதிமன்றம் உத்தரவு

Read More

Previous Post

பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த குப்பை மேடு!

Next Post

சிங்கப்பூர் குடியுரிமை பெறும் மலேசியர்கள்எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிரடி உயர்வு! | Makkal Osai

Next Post
சிங்கப்பூர் குடியுரிமை பெறும் மலேசியர்கள்எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிரடி உயர்வு! | Makkal Osai

சிங்கப்பூர் குடியுரிமை பெறும் மலேசியர்கள்எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிரடி உயர்வு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin