பெங்களூருவில் அரசுப் பேருந்து ஒன்று மேம்பாலத்தின் டிவைடரில் மோதி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் இருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்து ஒன்று, துமகுரு நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த வேகத்திலேயே நகர்ந்த பேருந்து, அடுத்த சில நொடிகளிலேயே அந்தரத்தில் தொங்கியது. இதனால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பேருந்தில் சிக்கிய மக்களை மீட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், 8 பேரை சிறு காயங்களுடன் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோ பலரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது.
A KSRTC bus met with an accident on May 18. Driver, conductor & 6 passengers sustained injuries after the driver reportedly lost control and collided with road divider at Madanayakanahalli near Nelamangala on Tumakuru Road@KSRTC_Journeys pic.twitter.com/7XdvomSsoh
— ChristinMathewPhilip (@ChristinMP_) May 18, 2024
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னே சென்ற கார் ஒன்று திடீரென திரும்பியதால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
