Last Updated:
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக – பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி தரப்பு கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அன்புமணி கூட்டணியில் இணைந்தார்.
இதன்பிறகு இருவரும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தற்போது பாமக கூட்டணியில் இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இன்று பிற்பகல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். இந்தச் சந்திப்பில் அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேசி இறுதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
January 07, 2026 10:22 PM IST


