• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

97 ஆன்லைன் மோசடி அழைப்பு மையங்கள் முடக்கம்: RM5 மில்லியனுக்கும் அதிகமான பணம் பறிமுதல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
97 ஆன்லைன் மோசடி அழைப்பு மையங்கள் முடக்கம்: RM5 மில்லியனுக்கும் அதிகமான பணம் பறிமுதல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 97 ஆன்லைன் மோசடி அழைப்பு மையங்களை (Scam Call Centres) அதிரடி சோதனைகள் மூலம் காவல்துறை முடக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போது RM5 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 1,070 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 600 உள்ளூர்வாசிகளும், 470 வெளிநாட்டினரும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்பட்ட 2,845 தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் RM5,067,818 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி வேலை வாய்ப்புகள், இல்லாத கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற ஆன்லைன் மோசடிகள் மூலம் இவர்கள் பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
கோலாலம்பூர் மாநகர காவல்துறைத் தலைவர் டத்தோ பாடில் மர்சூஸ் (Datuk Fadil Marsus) இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்:

“குடியிருப்புப் பகுதிகளை மையமாக வைத்து இயங்கி வந்த இந்த மோசடி கும்பல்களைக் கண்டறிய வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்த சிண்டிகேட்டுகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றவியல் சதி மற்றும் ஆன்லைன் மோசடி தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் (Section 120B(2)) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், வெளிநாட்டினர் குடிவரவுச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன் அதிகாரிகளிடம் சரிபார்த்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால், கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண்ணான 03-2115 9999 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.



Read More

Previous Post

Gold Rate | மீண்டும் மீண்டும் அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை… தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா…? | வணிகம்

Next Post

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

Next Post
தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin