தமிழகம் முழுவதும் நிலவிய கடுமையான வெயில் காரணமாக விவசாயம் பெரிதளவில் பாதிப்படைந்தது. இதனால் சந்தைகளில் உள்ளூர் காய்கறி வரத்து குறைந்திருப்பதால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் கோயம்பேடு மார்க்கெட் போன்ற மொத்த விலை சந்தைகளிலேயே காய்கறிகள் கணிசமாக விலை உயர்ந்து உள்ளன. தமிழகத்தின் முக்கியமான காய்கறி மார்க்கெட்டாகத் திகழும் கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறியின் வரத்துக் காரணமாகக் கணிசமான அளவு காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளன. இந்த விலை உயர்வு காரணமாக உள்ளூர் சந்தைகளில் காய்கறிகள் பெருமளவு விலை உயர்ந்து உள்ளன.
இதையும் படிங்க: Mattuthavani Market: தொடர்ந்து பெய்யும் கோடை கனமழை… மளமளவென உயர்ந்த முருங்கைக்காய் விலை…
இங்கு பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கத்திரிக்காய், தக்காளி, கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளன.
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் இங்கிருந்து காய்கறிகள் கொண்டு செல்லப்படும் உள்ளூர் சந்தைகளில் காய்கறிகள் விலை மேலும் உயர்ந்து உள்ளது.
கோடை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டதால் காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விலையேற்றம் 2 அல்லது 3 வாரங்களுக்குத் தொடரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)