Last Updated:
புதுச்சேரியில் தவெக கூட்டத்தில் ஆனந்திடம் மைக்கை பிடுங்கி வைரலான ஐபிஎஸ் இஷா சிங், டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தவெக கூட்டத்தின் போது, பொதுச் செயலாளர் ஆனந்திடமிருந்து மைக்கை பிடுங்கிய ஐபிஎஸ் பெண் அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி புதுச்சேரியில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரி ஐஜியாக பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அஜித் குமார் சிங்ளாவும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்தின் போது பொதுச் செயலாளர் ஆனந்திடம் மைக்கை பிடுங்கி பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க மறுத்த ஐபிஎஸ் இஷா சிங்கும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2021 குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற இஷா சிங், அக்முட் எனப்படும் அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கிய AGMUT கேடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், கடந்த 2024 ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், புதுச்சேரியில் கிழக்கு மண்டலத்தின் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை மேற்பார்வையாளராக எஸ்.பி. இஷா சிங் டி.ஜி.பியால் நியமிக்கப்பட்டார்.
அந்தப் பணியின்போது, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கி கூட்டத்தை ஐபிஎஸ் இஷா சிங் ஒழுங்குபடுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் அப்போது வைரலானது. இந்நிலையில் தற்போது, ஐபிஎஸ் இஷா சிங்கு டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Jan 04, 2026 10:15 PM IST


