Last Updated:
மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்த இவரது இந்த ஆட்டம், இந்திய அணியின் செலக்டர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோவா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் கிக்கெட் தொடரில் அவர் சென்னை அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அவரது இந்த ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த அவர், தனது ஆட்டத்தில் 14 மெகா சிக்ஸர்களையும் 9 பவுண்டரிகளையும் விளாசித் தள்ளினார். மும்பை அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தனது தம்பி முஷீர் கான் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை சர்பராஸ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்த இவரது இந்த ஆட்டம், இந்திய அணியின் செலக்டர்களின் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் சர்பராஸ் கானை சென்னை அணி வாங்கியுள்ளது. ரஞ்சி கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக விளையாடக்கூடியவர் என்ற பிம்பத்தை உடைத்து, ஒருநாள் போட்டிகளிலும் தன்னால் ‘டி20’ வேகத்தில் ரன் குவிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.


