Last Updated:
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவகுமார், ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் கேரள முதல்வர் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
கேரள முதல்வர் அரசியல் செய்வதாகவும், கர்நாடகாவுக்கு கேரள மக்கள் தேவையில்லை எனவும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பெங்களூருவின் கொகிலு, பக்கீர் காலனி, வசீம் லே அவுட் பகுதிகளில் கேரள மக்கள் உள்ளிட்டோர் குடியிருந்த வீடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி, மாநில அரசு இடித்து அகற்றியது. இதனை புல்டோசர் ராஜ்ஜியம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் தலையிட வேண்டாம் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கோரியிருந்தார். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களை கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் சந்தித்து பேசினர்.
VIDEO | Bengaluru: Karnataka Deputy CM DK Shivakumar (@DKShivakumar) visited Kogilu Layout on Monday. Responding to a question he said, “Kerala CM is doing politics. He is going to lose elections… he should be aware of this… this is a local issue. We don’t want any illegal… pic.twitter.com/NitkLqw9jp
— Press Trust of India (@PTI_News) December 30, 2025
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவகுமார், “ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் கேரள முதல்வர் அரசியல் செய்கிறார். அவர் தேர்தலில் தோற்கப் போகிறார்… இதை அவர் அறிந்திருக்க வேண்டும்… இது ஓர் உள்ளூர் பிரச்சினை. எந்தவொரு சட்டவிரோத நபர்களும் எந்தவொரு அரசு சொத்தையும் ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்பவில்லை. பெங்களூரில் குடிசைப் பகுதிகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “மற்ற நகரங்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை… அரசு சொத்துக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை, நாங்கள் அதைச் செய்கிறோம். எங்களுக்கு எந்த கேரள மக்களும் தேவையில்லை… கேரள முதலமைச்சர் அவர் தனது வேலையைச் செய்யட்டும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.” என்றும் அவர் கூறினார்.
Bangalore,Karnataka


