மும்பையில் ஒன்றாக ஆபாசப் படம் பார்த்தபிறகு 15 வயது சகோதரியை, 13 வயது தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பன்வேலி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 3 மாதம் கர்ப்பமாகி இருப்பதாகவும், அதை கலைக்க வேண்டும் என்று கூறி, அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் சிறுமி என்பதால் மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போதுதான், அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதாவது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் செல்போனில் அக்காவும், தம்பியும் சேர்ந்து ஆபாசப் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இவ்வாறு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருவரும் ஆபாசப் படத்தை பார்த்தபிறகு, பாலியல் உறவில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால், தோல்வியில் முடிந்ததாக தெரிவித்தனர். அதன்பின்னர் ஜனவரி மாதத்தில் மீண்டும் அதேபோல், ஆபாசப் படத்தை பார்த்தபிறகு இருவரும் பாலியல் உறவு கொண்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் சாதாரணமாக இருந்த நிலையில், ஏற்கெனவே வயதுக்கு வந்த சிறுமி என்பதால், மாதவிடாய் தள்ளிப் போனதாக தெரியவந்துள்ளது. 2 மாதத்திற்கு மேலாக மாதவிடாய் தள்ளிப் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோதுதான், தம்பியுடன் பாலியல் உறவு கொண்டதை தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியின் 3 மாத கருவை கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 376(2)(n) (ஒரே பெண்ணைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தல்) மற்றும் போக்சோ (POCSO) பிரிவுகள் 4, 6, 8 மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Also Read |
மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஆபாச நடனம்… இணையத்தில் குவியும் கண்டனங்கள்!
இந்த வழக்கு கந்தேஷ்வர் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகள் நல ஆணையம் அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த திங்கட்கிழமையன்று, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவரது மூத்த சகோதரர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 8ஆம் வகுப்பு படிக்கும் தங்கையை இருவரும் அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பம் அடைந்தார். இது தொடர்பான புகாரில் 20 மற்றும் 23 வயதுடைய இரு சகோதரர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
