சிங்கப்பூரில் இந்த புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில், 2026 சிறப்பு புத்தாண்டு TOTO குலுக்கலை Singapore Pools அறிவித்துள்ளது.
இந்த அதிஷ்ட குலுக்கல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) நடக்கவுள்ளது. இதற்கான வெற்றிப்பரிசாக 6.8 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.47 கோடி
இந்திய மதிப்பில் அது 47 கோடி ரூபாயை தாண்டும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Singapore Pools இணையதளத்தில் உள்ள தகவலின் படி, இந்தக் குலுக்கல் மிடில் ரோட்டில் உள்ள அதன் கிளையில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.
மேலும் குலுக்கல் நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக டிக்கெட் விற்பனை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
$10 மற்றும் $20 மதிப்புள்ள லாட்டரி தொகுப்பு பொட்டலங்கள் விற்பனை செய்யப்படும். இதன் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.
- ஒரு Quick Pick TOTO System 7 டிக்கெட் (மதிப்பு $7)
- ஒரு Singapore Sweep டிக்கெட் (மதிப்பு $3)

- இரண்டு Quick Pick TOTO System 7 டிக்கெட் (மதிப்பு $14)
- மூன்று Quick Pick TOTO Ordinary டிக்கெட் (மதிப்பு $3)
- ஒரு Singapore Sweep டிக்கெட் (மதிப்பு $3)

இந்தியாவில் இருந்து TOTO டிக்கெட் வாங்க முடியுமா என்ற கேள்வி நம்மிடம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
இந்தியாவில் இருந்துகொண்டு யாராலும் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் TOTO லாட்டரி டிக்கெட்டை வாங்க முடியாது.
TOTO என்பது Singapore Pools நிறுவனத்தால் நடத்தப்படும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி ஆகும்.
ஆன்லைன் மற்றும் மொபைல் வழியாக யார் டிக்கெட் வாங்கலாம்?
சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூர் அடையாள அட்டை (NRIC) அல்லது வெளிநாட்டு அடையாள எண் (FIN) கொண்டவர்கள்.
சிங்கப்பூர் குடிமகன், நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூரில் வசிக்க அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள்.
21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
இந்தியாவில் இருந்து வாங்க முடியுமா?
சிங்கப்பூர் NRIC அல்லது FIN இல்லையெனில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் பூல்ஸ் தளத்தில் பதிவு செய்ய முடியாது.
சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட கணக்கு (Singapore‑registered account) இல்லாவிட்டால், கைபேசி அல்லது eBetslip வழியாகவும் டிக்கெட்டுகளை வாங்க முடியாது.
இந்திய அந்நிய செலாவணி மேலாண்மை (FEMA) சட்டங்களின்கீழ், லாட்டரி மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது சட்டவிரோதமாக இருக்கலாம்.
அதே போல தமிழ்நாட்டில் லாட்டரி பந்தயங்களுக்கு தடை இருப்பதும் நாம் அறிந்தது தான்.

