Last Updated:
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாருக்கு ஆளான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டே தலைமறைவானார்.
விஜய் மல்லையாவுடன் தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தெரிவித்திருந்த கருத்து, சர்ச்சையான நிலையில் அதற்காக லலித் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாருக்கு ஆளான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டே தலைமறைவானார். அதேபோல, பல்வேறு பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கிய லலித் மோடியும் நாட்டை விட்டே வெளியேறினார்.
இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி அண்மையில் பங்கேற்றார். அது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த லலித் மோடி, தாங்கள்தான் நாட்டைவிட்டு தப்பி ஓடிய பெரும் குற்றவாளிகள் என அதில் குறிப்பிட்டிருந்தார். நாட்டை விட்டே வெளியேறி இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், லலித் மோடியின் அந்தப் பதிவு, இந்தியாவை சீண்டும் விதமாக உள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர்.


