Last Updated:
புதுச்சேரி பீட்சில் செல்பி எடுக்க முயன்றபோது ப்ரீத் பாறைகளுக்கு இடையில் சிக்கினார்.
புதுச்சேரி கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து பாறைகளுக்குள் சிக்கிக் கொண்ட பெண் ஐடி ஊழியர், பல மணி நேர போராட்டத்திற்குப் பின் கிரேன் உதவியுடன் மீட்டுள்ளார்.
ரீல்ஸ் மற்றும் செல்ஃபி வெறி இன்றைய தலைமுறையினரை பாடாய் படுத்தி எடுக்கிறது. அதாவது அதை எப்படி சொல்ல வேண்டுமென்றால், ப்ளான் போட்டு பக்காவாக கிளம்பி டூர் சென்றாலோ அல்லது டிரிப் அடித்தாலோ அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கும் காலமெல்லாம் மலையேறி போச்சு. மாறாக ஒரு பாட்டை போட்டு கூடவே ஆடாத ஆட்டம் போட்டு ரீல்ஸ் எடுக்கும் பழக்கம் ட்ரெண்டாகிவிட்டது. ஆனால் அது எப்படியொரு வில்லங்கத்தை இழுத்து விடும் என யாரும் புரிந்து கொள்வதுதான் இல்லை.
அப்படிதான் செல்ஃபி மோகத்தில் தோழிகளுடன் புதுச்சேரி கடற்கரைக்கு சென்ற இளம்பெண் ஒருவர் கால் வழுக்கி விழுந்து பாறைகளுக்கு நடுவே சிக்கி உயிரை பணயம் வைத்துள்ளார். பல மணி நேரம் பலரையும் பதை பதைக்க வைத்து மரணம் வரை சென்று திரும்பியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாண்டியைப் பதற விட்ட சம்பவத்தில் நடந்தது என்ன?.
புதுச்சேரி கடற்கரைக்கு குளுகுளு காற்று வாங்க தோழிகளுடன் டூர் வந்த பெண் அங்குள்ள பாறைகளில் ஏறி நின்று ஜாலியாக ரீல்ஸ் எடுத்துள்ளார். கூடவே பல செல்ஃபிகளையும் தட்டி உள்ளார். பேக்கிரவுண்ட் சரியா கவர் ஆகலையே என சுற்றி சுற்றி சுழன்று சுழன்று செல்ஃபி எடுக்கும்போது தவறுதலாகத் தடுக்கி விழுந்து பாறைகளுக்கு நடுவே வசமாகச் சிக்கிக்கொண்டார். ஈரமாக இருந்தால் விழுந்த வேகத்தில் உள்ளே இழுத்துக்கொள்ள இவரால் மேலே எழுந்திருக்க முடியவில்லை.
காரணம் பாதி உடல் பாறைக்கு மேலேயும் பாதி உடல் பாறைக்குள்ளேயும் சிக்கிக் கொள்ள வலியால் அலறி துடித்து கதறி உள்ளார். உடனே அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் கடற்கரை பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுத்து பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் அது முடியாததால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து பெண்ணை காப்பாற்றப் பொதுமக்களும் களத்தில் இறங்கினர்.
ஆனால் உடல் பாறைகளுக்கு நடுவே செமத்தையாக சிக்கிக் கொண்டதால், இவரை காப்பாற்றுவது மிகவும் சிரமம் ஆகி உள்ளது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு பாறையை அகற்றிய பின்னரே பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அவர் காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Puducherry (Pondicherry)
கடற்கரையில் செல்ஃபி எடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!


