Last Updated:
ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை மெல்போர்னில் வீழ்த்தி 14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் சாதனை படைத்தது. ஜோஸ் தங் ஆட்டநாயகன்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 ஆவது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில்,
மெல்போர்னில் 4 ஆவது போட்டி நடைபெற்றது. கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாளான “பாக்ஸிங் டே” என்று சிறப்புடன் 4 ஆவது போட்டி தொடங்கியதால், அதில் வெற்றி பெற இரண்டு அணிகளும் மல்லுக்கட்டின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களில் சுருண்டாலும், 2 ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில், 176 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 2 ஆவது நாளிலேயே வெற்றியை ருசித்தது. 2 நாட்களில் போட்டி முடிந்துள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர். இன்றும் அதே அளவில் ரசிகர்கள் வருகை இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
இந்த டெஸ்டில் 7 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் தங் ஆட்டநாயகன் விருதை தட்டிசென்றார். ஆஷஸ் தொடரில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் உள்ளது.


