ஒடிஸாவில் மீண்டும் பிஜு ஜனதா தள ஆட்சி அமைந்தால், மாநிலத்திலுள்ள மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதுதான் நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவாக இருக்கும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அவருக்கு நெருக்கமானவருமான வி.கே. பாண்டியன் தெரிவித்தார்.
தியோகர் மாவட்டத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த பிறகு விடியோ வெளியிட்டு பேசிய அவர், ஜெகன்னாதரின் ஆசிர்வாதத்துடன் ஜுன் 9ஆம் தேதி நவீன் பட்நாயக் 6வது முறையாக பதவியேற்பார். பொறுப்பேற்றவுடன் அவரின் முதல் கையெழுத்தாக, மாநிலத்தின் 90 சதவீத மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவாகத்தான் இருக்கும்.
மேலும், பிஜு ஸ்வஸ்த கல்யாண் யோஜனா என்ற மாநில சுகாதாரத் திட்டம் அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

&w=1200&resize=1200,675&ssl=1)