முன்னதாக, ஐ.சி.சி-யின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான், காஸாவில் போர் மூலம் பொதுமக்களை பட்டினி போட்டது, வேண்டுமென்றே அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை என உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்மீது கைது வாரண்ட் கோரியிருந்தார். குறிப்பாக, “இஸ்ரேலுக்கு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது” என்று கரீம் கான் தெரிவித்திருந்தார்.

கரீம் கானின் இந்த கைது வாரண்ட் கோரிக்கைக்கு இஸ்ரேல், ஹமாஸ் என இரு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்திருக்கிறது. இதில் ஹமாஸ், `ஏழு மாதங்களாக இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குற்றங்களை இழைத்த பிறகு அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் கோரிக்கை வந்திருக்கிறது” என்று விமர்சித்திருக்கிறது. அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, `இது தார்மீக மீறல். யூதர்கள் மீது இனப்படுகொலை நடத்திவரும் ஹமாஸுக்கு எதிராக நியாயமான போரை இஸ்ரேல் நடத்துகிறது. இக்கால யூத எதிர்ப்பாளர்களில் கரீம் கானும் ஒருவர்’ என்று கூறியிருக்கிறார்.
பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கையும் இஸ்ரேல் எதிர்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

