• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்குகிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்

GenevaTimes by GenevaTimes
December 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்குகிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில், மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும் புதிய திட்டத்தை பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி அறிவித்துள்ளார். அண்மையில் சிட்னி அருகே உள்ள பொண்டி கடற்கரையில் நடைபெற்ற யூதத் திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூடு இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பாக, 1996ஆம் ஆண்டு தஸ்மேனியா தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டது. அந்த சம்பவம் நவீன ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய படுகொலையாகக் கருதப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பொண்டி  கடற்கரைச் சம்பவம் மீண்டும் நாட்டை உலுக்கியுள்ளது. 

புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம். அவற்றைத் திருப்பிக் கொடுப்பவர்களுக்கு இழப்பீடாக அரசு பணம் வழங்கும். இந்தத் திட்டத்திற்கான செலவினத்தை மாநில அரசுகளும் மத்திய அரசும் தலா பாதியாக ஏற்கும்.

தற்போது ஆஸ்திரேலிய மக்களிடம் நான்கு மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருப்பதாக பிரதமர் அல்பனீசி தெரிவித்துள்ளார். இதனிடையே, பொண்டி கடற்கரை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசெம்பர் 21 தேசிய அஞ்சலி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், தாக்குதல் நடந்த மாலை 6.47 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

‘2040-க்குள் புற்றுநோய் பாதிப்பு 20 லட்சமாக உயரும்’ – மத்திய அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்! | உடல்நலம்

Next Post

துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி: கோமாவில் இருந்து மீண்ட பயங்கரவாதி ஆஸ்திரேலிய கோர்ட்டில் ஆஜர் | Makkal Osai

Next Post
துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி: கோமாவில் இருந்து மீண்ட பயங்கரவாதி ஆஸ்திரேலிய கோர்ட்டில் ஆஜர் | Makkal Osai

துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி: கோமாவில் இருந்து மீண்ட பயங்கரவாதி ஆஸ்திரேலிய கோர்ட்டில் ஆஜர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin