புதுக்கோட்டையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்ந்து காணப்பட்டது தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது சில நாட்களாக பீன்ஸ் மற்றும் பூண்டு போன்ற காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம்.
தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய் வரையும், இஞ்சி- 180 வரையிலும், பச்சைமிளகாய் – 100 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் ,பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், பீட்ரூட்- 60, உருளைக்கிழங்கு – 60,பீன்ஸ் 90 முதல் 100 ரூபாய், கத்தரிக்காய் – 55 முருங்கைக்காய் 60 முதல் 70 ரூபாய், பூண்டு 300 முதல் 415 ரூபாய் வரை கேரட் – 70 ரூபாய் முட்டைகோஸ்- 50 ரூபாய் அவரைக்காய்- 100 ரூபாய், சுரைக்காய்- 50 ரூபாய், பாகற்காய் – 50 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. அதாவது தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், இனி வரும் நாட்களில் விலை இதே போன்று இருக்கும் என்றும் வெப்பநிலை அளவு குறைந்து வரத்து அதிகரித்தால் காய்கறிகள் விலை படிப்படியாக குறையும் என தெரிவிக்கின்றனர்.மேலும் வாரச்சந்தை மற்றும் வெளி மார்கெட் கடைகளில் இந்த விலையை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
