• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முட்டையில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களா? யூட்யூபர் புகாரையடுத்து FSSAI போட்ட அதிரடி உத்தரவு! | உணவு

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முட்டையில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களா? யூட்யூபர் புகாரையடுத்து FSSAI போட்ட அதிரடி உத்தரவு! | உணவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 16, 2025 12:37 PM IST

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், இந்தியா முழுவதும் முட்டைகளின் தரம் பரிசோதிக்கப்பட உள்ளது.

News18
News18

‘புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் முட்டைகள்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் யூ-ட்யூபில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை முடிவுகள், இணையவாசிகளை கலங்கடித்திருந்தது. இந்நிலையில் முட்டைகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வாரம் Trustified என்ற யூ-ட்யூப் சேனலில் வெளியான வீடியோவின்படி, உயர்தர மற்றும் 100% ஆண்டிபயாடிக் இல்லாதது என்று விளம்பரப்படுத்தப்படும் எக்கோஸ் நியூட்ரிஷியன் (Eggoz Nutrition) முட்டைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயைத் தூண்டும் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்கள் யூட்யூப் சேனலில் பரிசோதிக்கப்பட்ட முட்டை மாதிரிகளில், AOZ எனப்படும் நைட்ரோஃபுரான் என்ற தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக்கின் மாற்றுப் பக்கவிளைவு இருப்பதாகவும் அந்த யூ-ட்யூபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் அளவு பில்லியனுக்கு 0.73 பாகங்கள் மட்டுமே என்றாலும், தயாரிப்பு நிறுவனம் ‘100% ஆண்டிபயாடிக் இல்லாதது’ என்று விளம்பரப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டால் இது நுகர்வோரிடையே நம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இத்துடன் இந்த முட்டைகளிலுள்ள நைட்ரோஃபுரான் மற்றும் நைட்ரோஇமிடசோல் போன்ற மரபணு நச்சுத்தன்மை கொண்ட இரு வேதிப்பொருள்கள் டிஎன்ஏ-வை பாதிக்கக்கூடும் என்றும், அதனால் புற்றுநோய் அபாயம் உயரும் என்றும் அந்த யூடியூபர் கூறியுள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மருத்துவர்கள், ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்கள், மக்கள் என பல தரப்பினரும் இதுபற்றி கேள்வி எழுப்பியதை அடுத்து, எக்கோஸ் நியூட்ரிஷியன் தரப்பில் “எங்களது முட்டைகள், இந்திய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழுமையாக உட்பட்டவைதான். சுற்றுச்சூழல் காரணி (மாசடைந்த நிலத்தடி நீர் போன்றவை) காரணமாக மிகச் சிறிய அளவிலான வேதியியல் தடயங்கள் இதுபோன்ற ஆய்வுகளில் காணப்படலாம். நாங்கள் முட்டைகளில் எந்த விதமான ஆண்டிபயாடிக்குகளும் பயன்படுத்தப்படவில்லை. நுகர்வோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக NABL அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் கூடுதல் சோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளன. வெளிப்படையான அறிக்கையை தருவோம்” என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: Eggs Exposed | முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் உயர்கிறதா? யூ-ட்யூப் வீடியோவால் பரபரப்பு… நடந்தது என்ன?

இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், இந்தியா முழுவதும் முட்டைகளின் தரம் பரிசோதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நேற்று FSSAI சார்பில், இந்தியா முழுக்க உள்ள பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத அனைத்து முட்டைகளும் சாம்பிளாக சேகரிக்கப்படவும், குறிப்பிட்ட 10 ஆய்வகங்களுக்கு அவற்றை பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கவும் பிராந்திய அலுவலகங்களுக்கு அறிக்கை வழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள், முட்டையின் தரம் குறித்து நிலவும் முக்கியமான சந்தேகங்களையும் அச்சத்தையும் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனையானது, மிக முக்கியமாக முட்டையில் நைட்ரோஃபுரான் இருக்கிறதா என்பதை அறிய உதவும் என சொல்லப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :

December 16, 2025 12:37 PM IST

Read More

Previous Post

இலங்கை முழுவதும் ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக மாற்றிய டிட்வா

Next Post

IPL Auction Live : 350 வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் மினி ஏலம்.. மொபைலில் நேரலையாக பார்ப்பது எப்படி? | விளையாட்டு

Next Post
IPL Auction Live : 350 வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் மினி ஏலம்.. மொபைலில் நேரலையாக பார்ப்பது எப்படி? | விளையாட்டு

IPL Auction Live : 350 வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் மினி ஏலம்.. மொபைலில் நேரலையாக பார்ப்பது எப்படி? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin