Last Updated:
குயின்டன் டி காக் 90 ரன்கள், மார்க்ராம் 29 ரன்கள் விளாச, தென் ஆப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. இந்தியா 214 ரன்கள் இலக்குடன் இரண்டாம் இன்னிங்ஸ் ஆடுகிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்பூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் முலான்பூரில் உள்ள மைதானத்தில் 2வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து பேட்டிங்கில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 4 விக்கெட்களை இழந்து 213 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை முடித்தது.
தென் ஆப்பிரிக்காவில் குயின்டன் டி காக் 46 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 90 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ராம் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டோனோவன் ஃபெரீரா 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசி 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப் சிங் அதிகப்பட்சமாக 54 ரன்களை கொடுத்தார். அடுத்தப்படியாக ஜஸ்பிரிட் பும்ரா 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை கொடுத்தார். இருவரும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இன்னிங்ஸை ஆட இருக்கும் இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்கா அணி 214 ரன்களை வெற்றி இலக்காக வைத்துள்ளது.
December 11, 2025 8:53 PM IST


