
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
மேலும், அனர்த்தங்கள் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளை துப்புரவு செய்யும் மற்றும் புனர்நிர்மாணிக்கும் விடயங்கள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

