சிறுபான்மையினருக்கு எதிராக, தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், பிரதமர் மோடி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளிதுள்ளார். அதில், சிறுபான்மையினருக்கு எதிராக, தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக அவர்கள் செயல்படுவதைப் பற்றி மட்டுமே, தான் பேசுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் கட்டாக், தென்கனால் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு, இரண்டாயிரத்து 200-ல் இருந்து 3 ஆயிரத்து 100 ரூபாயாக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் படிக்க: பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
மேலும் பாஜக வெற்றி பெற்றால், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக முடியும் என்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
