• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீட்டில் எதற்காகவும் விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது

GenevaTimes by GenevaTimes
December 5, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
வீட்டில் எதற்காகவும் விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆன்மீக சாஸ்திரங்களின் படி, குடியிருக்கும் வீட்டில் எந்த காரணத்திற்காகவும் விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. அசைவம் சாப்பிட்டால், குளித்து விட்டு விளக்கேற்றலாம். மாறாக பூஜை அறையை பூட்டி வைப்பதும், விளக்கு ஏற்றாமல் இருப்பதும் முற்றிலும் தவறானதாகும். அசைவம் சாப்பிடுபவர்கள் காலையிலேயே குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். அசைவம் சாப்பிட்ட பிறகு மாலையில் மீண்டும் குளித்து விட்டு விளக்கு ஏற்றலாம். இதனால் எந்த தோஷமும் ஏற்படாது.

அசைவம் சாப்பிட்டு விளக்கு ஏற்றுவதால் தோஷம் ஏற்படும் என்றால், அதே வீட்டில் தானே அசைவம் சமைக்கப்படுகிறது. அப்போது மட்டும் தோஷம் வந்து விடாதா? என்ற வாதமும் வருகிறது.பொதுவாக வீட்டில் விளக்கேற்றுதல் என்பது வேள்விக்கு நிகரான ஒரு செயல். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள், தீயசக்திகளை வெளியேற்ற ஆன்மீக சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். ஆனால் எப்போது எல்லாம் விளக்கு ஏற்றலாம்? எந்த மாதிரியான வேளைகளில் விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்ற குழப்பம் பலரும் இருந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்லலாம் கூடாதா? வீட்டில் விளக்கேற்றலாமா? கூடாதா? என்ற சந்தேகமும், குழப்பமும் பலருக்கும் உள்ளது. இன்னும் சில வீடுகளில் அசைவம் சாப்பிடும் மற்றும் அசைவம் சமைக்கும் நாட்களில் வீட்டின் பூஜை அறையை பூட்டி வைத்து விடுவார்கள். அன்றைய தினம் விளக்கேற்றுவதே, வழக்கமான பூஜைகள் செய்வதையோ தவிர்த்து விடுவார்கள். இது சரியா? தவறா? என்ற விவாதமும் ஒரு புறம் உள்ளது.

அசைவம் சாப்பிடும் நாட்களிலும் வீட்டில் விளக்கேற்றாமல் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. தாராளமாக விளக்கேற்றலாம். அசைவம் சாப்பிட்ட பிறகு நேரடியாக சென்று தான் விளக்கு ஏற்றக் கூடாது. குளித்து விட்டு, சுத்தமாக சென்று விளக்கு ஏற்றலாம் என ஆன்மீக அன்பர்கள் சொல்கிறார்கள்.

குளிப்பது என்பது உடலை மட்டுமல்ல மனதையும் சுத்தப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது. அதனால் குளித்த பிறகு, பூஜை அறையில் உள்ள ருத்ராட்சம், சாளக்கிராமம் போன்ற புனிதப் பொருட்களைத் தொட்டு பூஜை செய்யலாம். அசைவம் உண்ட பிறகு மனம் அமைதியாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதே சமயம் அசைவம் சாப்பிட சிறிது நேரத்திலேயே சென்று குளித்து விட்டு விளக்கு ஏற்றக் கூடாது. சுத்தம் இல்லாமல் ஒரு போதும் விளக்கு ஏற்றவே கூடாது. அதே போல் வீட்டில் அசைவ உணவு சமைத்து வைத்து விட்டு, அதன் வாசனை வீட்டில் இருக்கும் போது, வீட்டில் விளக்கேற்றுவதால் தெய்வ நிந்தனை, பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும். அதோடு அசைவம் சாப்பிடும் சமயத்தில் ருத்ராட்சம் போன்ற தெய்வீக சின்னங்களை அணிந்திருப்பதும்பெரும் பாவமாகும். அவற்றின் புனித தன்மை மற்றும் தெய்வீக தன்மையை அவமதிப்பதற்கு சமமானதாகும்.

The post வீட்டில் எதற்காகவும் விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

அனர்த்த எச்சரிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

Next Post

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் நிவாரணம்: வெளியான சுற்றறிக்கை

Next Post
பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் நிவாரணம்: வெளியான சுற்றறிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் நிவாரணம்: வெளியான சுற்றறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin