சில்லறை வர்த்தகத்தில் உலகத் தரம் வாய்ந்த ஃபேஷன் ஆடைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை இந்தியர்களுக்கு வழங்கும் முயற்சியாக இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பிரிட்டனின் ASOS நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
இந்திய ஃபேஷன் பொருட்கள் வர்த்தகத்தில் ரிலையன்ஸின் இந்த நடவடிக்கை முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள். பிரிட்டனை சேர்ந்த ASOS நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த ஆடைகள், காலணிகள், பேக்குகள் போன்ற ஃபேஷன் பொருட்களை உலகம் முழுவதும் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரிலையன்ஸ் அந்த நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் ASOS இன் பொருட்களை இந்தியாவில் நேரடியாக கடைகளிலும், ஆன்லைன் தளத்திலும் விற்பனை செய்யும்.
இந்தியாவில் ரிலையன்ஸ் அமைத்திருக்கும் எக்ஸ்க்ளுசிவ் பிராண்ட், மல்டி பிராண்ட் கடைகள் மற்றும் ஆன்லைன் வர்த்தக தளங்களில், ரிலையன்ஸ் ஸ்டிக்கர் அச்சிடப்பட்டு ASOS பொருட்கள் விற்பனையாகும். நாட்டில் ரிலையன்ஸ் ஏற்படுத்தியுள்ள விற்பனை நெட்வொர்க் ASOS பொருட்கள் மிக எளிதாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று துறை நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இதேபோன்று இந்தியாவில் சர்வதேச ஃபேஷன் சில்லறை வர்த்தகத்தில் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு ஃபேஷன் பிரியர்கள் மத்தியில் காணப்படுகிறது.
தற்போது ரிலையன்ஸ் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் மூலமாக உலகின் முன்னணி ஃபேஷன் நிறுவனங்களுடைய பொருட்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தில் மிக எளிதாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச அளவில் எது லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் உள்ளதோ, அவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கிடைக்கும். இதுகுறித்து ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் இயக்குனர் இஷா அம்பானி கூறியதாவது-
எங்களுடைய ஃபேஷன் குடும்பத்திற்கு ASOS நிறுவனத்தை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உலகத் தரம் வாய்ந்த, குளோபல் ட்ரெண்ட் பொருட்கள் இந்திய சந்தையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. அந்த பயணத்தில் மிக முக்கியமான பிரிட்டனின் ASOS நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பார்ட்னர்ஷிப் இந்திய ஃபேஷன் சில்லறை வர்த்தகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச ஃபேஷன் தரமாக விரைவாக கிடைப்பதை இந்த பார்ட்னர்ஷிப் உறுதி செய்யும் என்று கூறியள்ளார்.
ASOS நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜோஸ் அன்டோனியோ ராமோஸ் கூறியதாவது- உலகம் முழுவதும் உள்ள ஃபேஷன் ஆர்வலர்களுக்கு, தரமான ட்ரெண்டான பொருட்கள் விரைந்து கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எங்களுடைய ப்ராண்ட் இன்னும் பல பகுதிகளில் ரீச் ஆகும். என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
