• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

NDRSC உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்கவின் விசேட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
NDRSC உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்கவின் விசேட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இடம்பெயர்ந்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களுக்காக வழங்கும் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு


 


 தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க  அறிவிப்பு


 


ஒரு தனிநபருக்கு வாராந்திற்கு வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களுக்கான தொகையை 1,800 ரூபாவிலிருந்து 2,100 ரூபாவாகவும், ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு வாராத்திற்கு வழங்கப்படும் தொகையை  3,600 ரூபாவிலிருந்து 10,500 ரூபாவாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.


 


தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க இன்று (30) வெளியிட்டார்.  


 


அனர்த்த நிவாரண சேவை  நிலையத்தினால் தயாரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்  வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நேற்று மாலை (29) ஆறு மணி வரை இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமை குறித்த உத்தியோகபூர்வ விபரங்கள் பின்வருமாறு உள்ளது.


 


• அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை: 234 503 


• அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 833,985.


• உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள்: 159.


• காணாமல் போன நபர்களின் எண்ணிக்கை : 203.


• பராமரிப்பு  நிலையங்களின் எண்ணிக்கை: 919 


• பராமரிப்பு  நிலையங்களில் உள்ள  குடும்பங்களின் எண்ணிக்கை: 34198.


• பராமரிப்பு நிலையங்களில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை: 122, 822 ஆகும்.


 


 ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும்,பாதுகாப்புச் செயலாளர் ஒப்பத்துடன்  நேற்று வெளியிடப்பட்ட 1/2025 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின் ஊடாக தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு நிவாரண சேவைகளை வழங்குவதற்கான விலைகள்  திருத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக தற்போதுள்ள அனர்த்தத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சுற்றுநிருபம்  வெளியிடப்பட்டுள்ளது.


 


3(2025) சுற்றுநிருபத்திற்கு அமைவாக 2025.11.28 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளரினால் தற்போதை நிலைமையை  விஸ்தரிக்கப்பட்ட அனர்த்த நிலைமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 


இந்த நிலையில்  பிரதேச செயலாளர்கள் எந்தத் தடையும் இன்றி 50 மில்லியன் ரூபாய் (50,000,000) வரை  கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 


 உலர் உணவுப் பொருட்களுக்கான பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களை வழங்க முடியும் எனவும் சுற்றுநிருபத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


 


தமது பிரதேசத்தில்  காணப்படும்  நிலைமைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான குழுவின் மூலம் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


 


• உலர் உணவுப் பொருட்களுக்கான வாராந்த அதிகபட்ச தொகை: ஒரு தனி நபருக்கான அதிகபட்ச வாராந்த தொகை, 1800 ரூபாவிலிருந்து 2100 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


• ஐந்து நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கான அதிகபட்சத் தொகை: முன்னர் இருந்த 3,600 ரூபாய் என்ற வரம்பு 10,500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு மடங்கை விட அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


 


இந்த வரம்புகளுக்கு உட்பட்டு, பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உலர் உணவுப் பொருட்களை வழங்க முடியும். இருப்பினும், சமைத்த உணவுகளை வழங்குவது தொடர்பான வரம்புகள் அவ்வாறே அமுலில் உள்ளன.


 


அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது தகவல் தெரிவிக்கவோ விரும்பினால், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நேரடித் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்:


 


• நேரடித் தொலைபேசி இலக்கம்: 011 2665258.


• அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) 117 என்ற இலக்கத்தின் மூலமும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்துடன்  தொடர்பு கொள்ளலாம்.



Read More

Previous Post

வீட்டின் கூரையில் இருந்து விழுந்து பிரபல நடிகர் மரணம்! | Makkal Osai

Next Post

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை புதிதாக வழக்குப் பதிவு | இந்தியா

Next Post
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை புதிதாக வழக்குப் பதிவு | இந்தியா

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை புதிதாக வழக்குப் பதிவு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin