வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பை உலக நாடுகள் அவ்வளவு இடத்தில் மறந்து விட முடியாது. லாக் டவுன் என்ற பெயரில் உலக நாடுகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஸ்தம்பித்து போயின. கண்ணுக்குத் தெரியாத வைரஸை சமாளிக்க முடியாமல், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இருந்து, ஏழை நாடுகள் வரை தங்களது குடிமக்களின் உயிரை பறிகொடுத்தன.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உலகின் சில பகுதிகளில் இன்னும் சரியாகவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 5-ஆம் தேதி அங்கு சுமார் 13 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அடுத்த 7 நாளில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எதனால் அங்கு அதிகரித்துள்ளது என்பது தொடர்பாக சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிப்பு அதிகம் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க – கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு… கபளீகரமான இந்தோனிசியா
இருப்பினும் தனிநபர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது மற்றொரு முக்கிய அறிவுறுத்தலாக வயது முதிர்ந்தோர் கடந்த 12 மாதங்களாக கொரோனா தடுப்பூசி ஏதும் எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் தற்போது கூடுதலாக ஒரு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் மாஸ்க் அணிவதை தவிர்த்து மற்ற எந்த கட்டுப்பாடுகளும் மிதிக்கப்படாது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
