நாம் விரும்பும் விஷயங்கள், நம்முடைய வாழ்க்கைக்கு நன்மையை தரும் விஷயங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அந்த விஷயத்தை எப்படி நடக்க வைப்பது, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழி தெரியாது. இதன் காரணமாக, நேரம் வரும் போது தானாக நடக்கும். நமக்கு எப்போது அதை நடத்தி தர வேண்டும் என கடவுள் நினைக்கிறாரோ அப்போது நடக்கட்டும் என மனதை தேற்றிக் கொண்டு, அந்த நல்ல விஷயம் எப்போது நடக்கும் என காத்துக் கொண்டிருப்போம். அப்படி நீங்கள் விரும்பும் அந்த நல்ல விஷயம் ஒரே மாதத்தில் நடப்பதற்கு ஒரு வழிபாடு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மை தான். முருகப் பெருமானை மனதார நினைத்து, முழு நம்பிக்கையுடன் இந்த எளிமையான வழிபாட்டினை மட்டும் தினமும் தவறாமல் செய்து வாருங்கள். தொடர்ந்து 36 நாட்கள் இந்த வழிபாட்டினை செய்வதால், 36 வது நாளில் நீங்கள் விரும்பும் அந்த நல்ல விஷயம் நிச்சயம் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.நாம் விரும்பும் விஷயங்கள், நம்முடைய வாழ்க்கைக்கு நன்மையை தரும் விஷயங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அந்த விஷயத்தை எப்படி நடக்க வைப்பது, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழி தெரியாது.

முருகப் பெருமானுக்குரிய நாளிலோ அல்லது ஏதாவது ஒரு நல்ல நாளிலோ இந்த வழிபாட்டினை செய்ய துவங்குங்கள். காலையில் எழுந்து, சுத்தமாக குளித்து விட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு, வீட்டில் உள்ள முருகப் பெருமானின் படத்திற்கு முன் அமர்ந்து, ஒரு பேப்பரில் நீங்கள் நடக்க வேண்டும் என விரும்பும் அந்த நல்ல விஷயத்தை எழுதுங்கள்.
எது நடந்தால் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுமோ அந்த ஒரு விருப்பத்தை, அதாவது ஒரே ஒரு விருப்பத்தை மட்டும் பேப்பரில் எழுதிக் கொள்ளுங்கள்.பிறகு அதே காகிதத்தில் உங்களின் விருப்பத்திற்கு கீழ், மூன்று முறை”ஓம் சரவண பவ” என எழுதுங்கள். பிறகு பகலில் அதே பேப்பரில் ஆறு முறை “ஓம் சரவண பவ” என எழுதுங்கள். மீண்டும் இரவு நேரத்தில் அதே பேப்பரில் ஒன்பது முறை “ஓம் சரவண பவ” மந்திரத்தை எழுதுங்கள். பிறகு அந்த பேப்பரை முருகனின் பாதத்தில் வைத்து விடுங்கள். இதே போல் தொடர்ந்து 36 நாட்கள் செய்து வாருங்கள். ஒரு நாளைக்கு 18 முறை என்ற கணக்கில் 36 நாட்களில் மொத்தம் 540 முறை “ஓம் சரவண பவ” மந்திரத்தை நீங்கள் எழுதி முடித்திருப்பீர்கள்.
பலருக்கும் இது என்ன கணக்கு என்ற குழப்பம் இருக்கும். ஆனால் இதை நன்கு கவனித்து பார்த்தால் இதற்குள் இருக்கும் ஆன்மீக சூட்சமம் புரியும். அதாவது, தினமும் நீங்கள் எழுதும் மந்திரத்தின் எண்ணிக்கை 18, இதை செய்யும் நாட்களின் கணக்கு 36, மொத்தமாக நீங்கள் எழுதி முடித்த மந்திரத்தின் எண்ணிக்கை 540. இவற்றில் எந்த எண்ணை கூட்டினாலும் 9 என்ற எண் வரும். அதே போல் 36 நாள் 3 வேளை என்பதை கூட்டினால் 108 என்று வரும். இதன் கூட்டு எண்ணிக்கையும் 9 தான். 18, 36, 504 இந்த எண்களை கூட்டினால் 594 வரும். இதையும் கூட்டி, ஒற்றை இலக்க எண்ணாக மாற்றினால் 9 தான் வரும்.
நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நவகிரகங்கள் தான் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், நீங்கள் விரும்பும் நல்ல காரியம் நடக்காமல் இருப்பதற்கு நவகிரகங்களான ஒன்பது கிரகத்தில் எது காரணமாக இருந்தாலும், அந்த தடையை தகர்த்து, முருகனை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார் என்பது தான் இந்த வழிபாடு உணர்த்துவது. அதனால் நீங்கள் முருகனிடம் வைக்கும் வேண்டுதல் நிச்சயம் நடந்தே தீரும்.




