• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அழுத்தம் அதிகரிப்பு : அன்வாரின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஷம்சுல்

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
அழுத்தம் அதிகரிப்பு : அன்வாரின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஷம்சுல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்ராஜெயா:

பிரதமரின் அரசியல் செயலாளராக இருந்த ஷம்சுல் இஸ்கந்தர் இன்று தாம் பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை நேரடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைத்ததாக அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

ஆறு நாட்களுக்கு முன், 2024 மருத்துவமனை திட்ட ஒப்பந்தத்திற்கு ஆதரவு கடிதம் வழங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் தமது அரசியல் செயலாளரை மிகவும் கடுமையாக கண்டித்ததால் அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

தன்னை குறிவைத்து திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறிய ஷம்சுல் இஸ்கந்தர், அவை மடானி அரசாங்கத்தின் பிம்பத்தையும் சேதப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார்.

“மடானி அரசாங்கத்தை பாதிக்க முயற்சிக்கும் சில தரப்பினரின் தாக்குதல்களில் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் பதிவு செய்துள்ளார்.

பிரதமர் அன்வார் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும், இணைந்து பணியாற்றிய வாய்ப்பிற்கும் அவர் நன்றியையும் தெரிவித்தார்.

சமீபத்தில் 2024 மருத்துவமனை கட்டுமான திட்டத்துக்கான ஒப்பந்ததாரருக்கு, அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மீறி ஆதரவு கடிதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைப்பற்றிக் கேள்வி எழுந்தபோது, பிரதமர் அன்வார் மிகத் தெளிவாகவும் திடமாகவும் ஷம்சுல் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியல் சூழல் தொடர்ந்தும் பரபரப்பாக உள்ள நிலையில், இந்த ராஜினாமா அரசாங்கத்தினுள் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

The post அழுத்தம் அதிகரிப்பு : அன்வாரின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஷம்சுல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்.. தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி? நாளை கடைசி நாள் ஆட்டம் | விளையாட்டு

Next Post

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர்

Next Post
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர்

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin