Last Updated:
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளருடன் வாக்குவாதம் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில், செய்தியாளரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுவை விற்று நலத்திட்டங்கள் செய்வதை ஏற்க முடியாது என்றார். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படும் எனவும், புதுச்சேரியில் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மெட்ரோ ரயில் திட்டம் தோல்வியுற்ற திட்டம் என விமர்சித்தார்.
அப்போது, சீமானுக்கும் கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் பேசிய சீமான், திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஐ.ஆர்,
மெட்ரோ ரயில் தொடர்பான கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்#Seeman #NTK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/xMARH1s6cT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 23, 2025
இதைத் தொடர்ந்து, கேள்வி எழுப்பிய செய்தியாளரை நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர்.
Puducherry (Pondicherry)
November 23, 2025 7:05 PM IST


