இந்த புதிய வங்கிக் கணக்கில் இணைபவர்கள், சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் பாதுகாப்பான கிரெடிட் கார்டு ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும். சூப்பர்.மணி உடன் இணைந்து வழங்கப்படும் இந்த சேவை, இளம் தலைமுறை மற்றும் டிஜிட்டல்-முன்னுரிமை கொண்ட நுகர்வோர்களுக்கான வங்கி அனுபவத்தை எளிமையாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோட்டக்811-இன் இந்த புதிய முயற்சி “Core India” எனப்படும் பிரிவுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது எளிமையான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிதி கருவிகளை விரும்பும் சாதாரண இந்தியர்களை மையமாகக் கொண்ட ஒரு வசதியாகும்.
இதில், சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், முதல்முறையாக வேலையில் சேர்பவர்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் போன்றோர் அடங்குவர். சிறிய முயற்சிகளிலேயே பெரிய பலன்களை நாடி, நிதி கட்டுப்பாட்டை முன்னிலைப்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர்.
எனவே, அவர்களுக்கான சரியான வங்கிக் கணக்காக கோட்டக்811-இன் 3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. எளிதில் தொடங்கக்கூடிய இந்த வங்கிக் கணக்கு, 100% டிஜிட்டல் மயமாகவும் மற்றும் முழுமையாக கட்டுப்படுத்தக்கூடியதுமாகவும் இருக்கும்.
1. ரூ.1,000 முதலீட்டுடன் தொடங்கலாம்: குறைந்தபட்சம் ரூ.1,000-க்கு ஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை திறப்பதன் மூலம் இந்த கணக்கை தொடங்கலாம்.
2. அதிக வட்டி மற்றும் கேஷ்பேக்: உங்களது நிலையான வைப்புத் தொகைக்கான வட்டியுடன் சேர்த்து, தினசரி செலவுகளுக்கும் கேஷ்பேக் கிடைக்கும்.
3. கிரெடிட்டில் யுபிஐ பயன்பாடு: தற்போதைய டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் புரட்சியாக விளங்கும், யுபிஐ மூலம் வழக்கம்போல பணம் செலுத்தலாம், அதே நேரத்தில் ரிவார்டுகளும் பெறலாம்.
4. பாதுகாப்பான கிரெடிட் கார்டு: நிலையான வைப்புத் தொகையால் ஆதரிக்கப்படும் கோட்டக்811-சூப்பர்.மணி கிரெடிட் கார்டுக்கு வருமானச் சான்று தேவையில்லை.
5. முழுமையாக டிஜிட்டல்: முழுவதும் டிஜிட்டல் நடைமுறை என்பதால், ஆவணங்களை நேரில் வழங்கத் தேவையில்லை, முழுக்க முழுக்க 100% ஆன்லைனிலேயே எளிதாக முடித்துக் கொள்ளலாம்.
6. முழு கட்டுப்பாடு: உங்களது நிலையான வைப்புத் தொகையின் அளவே, உங்களது கிரெடிட் கார்டின் வரம்பை நிர்ணயிக்கும்.
கோட்டக்811-ன் இணைத் தலைவரான ஜெய் கோடக், இந்த புதிய அறிமுகத்தைப் பற்றி கூறுகையில், “கோட்டக்811, இந்தியாவின் குறிப்பிட்ட பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது. அவர்கள், நிதிரீதியாக முன்னேறுவதற்கான நடைமுறை வழிகளைத் தேடுகிறார்கள்.
இவர்கள் டிஜிட்டல் ஆர்வலர்களாக இருந்தாலும், கடன் என்று வரும்போது எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாடு, தெளிவு மற்றும் மதிப்பை விரும்புகிறார்கள். அந்த வகையில், 3-இன்-1 சூப்பர் அக்கவுண்ட் அவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் மற்றும் தொடங்கவும் எளிதானது, பயன்படுத்தவும் எளிதானது” என்றார்.
புதிய கணக்கைத் தொடங்க விரும்பும் பயனர்கள் kotak811.com/3in1SuperAccount என்ற தளத்துக்கு செல்லலாம் அல்லது
super.money மொபைல் செயலியை பதிவிறக்கி சில நிமிடங்களில் 3-இன்-1 சூப்பர் அக்கவுன்டைத் தொடங்கலாம்.
November 17, 2025 6:27 PM IST
சேமிப்பு, முதலீடு, செலவு… 3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட்டை அறிமுகப்படுத்திய கோட்டக் மகேந்திரா…

