• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாப்பிள்ளை – குஜராத்தில் பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாப்பிள்ளை – குஜராத்தில் பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காந்திநகர்,குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழூவீச்சில் நடைபெற்று வந்தன. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மாப்பிள்ளை சாஜனும், மணமகள் சோனியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பழக்கமானவர்கள். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று திருமண சேலை மற்றும், பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியை எடுத்து மணமகள் சோனியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் சோனியின் தலையை சுவற்றில் வேகமாக மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளம்பெண் சோனி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சோனியை கொலை செய்துவிட்டு சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாஜன் பரய்யாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருமண தினத்தன்று மணமகளை மாப்பிள்ளை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபாரிசானை விட்டு வெளியேறினாலும், அன்வாரை ஆதரிப்பதாக மஇகா உறுதியளிக்கிறது



Read More

Previous Post

அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது: விக்கிரம ராஜா | Products Banned by TN Govt should not be Sold: TN Traders’ Associations Federation President

Next Post

பிரித்தானிய நிரந்தர குடியுரிமை: அகதிதஞ்சம் பெருவோருக்கு அதிர்ச்சி தகவல்

Next Post
பிரித்தானிய நிரந்தர குடியுரிமை: அகதிதஞ்சம் பெருவோருக்கு அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய நிரந்தர குடியுரிமை: அகதிதஞ்சம் பெருவோருக்கு அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin