கோத்தா கினபாலு:
17-ஆவது சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 9,300 போலீசார் 15 முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
அரசியல் கருத்து முரண்பாடுகள், அரசு சாரா இயக்கங்களின் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த 15 இடங்ள் அதிக பாதுகாப்பு தேவையுடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று, தேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.
சபா மாநிலம் முழுவதும் உள்ள 73 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மொத்தமாக 9,300 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்கள் பணியில் ஈடுபடுவதாக அவர் அறிவித்தார்.
இன்று மாநிலம் முழுவதும் 25 வேட்புமனுத் தாக்கல் மையங்களில் 4,300 அதிகாரிகள் பணியாற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தேர்தல் பிரசங்கங்களும், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
தேர்தல் முறையின்போது சமூக அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையடுத்து, பிடிஆர்எம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அனைத்தும் பணியாற்றி வருவதாகவும் காலிட் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலைமை தேர்தல் நிகழ்வுகளின் ஒழுக்கத்தையும், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பையும் மீறாமல் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார் அவர்.




