Last Updated:
வீடியோ பதிவில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று பல்வேறு மொழிகளில் போன் செய்து ரசிகர்கள் கேட்கின்றனர்.
தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் குறித்து சென்னை அணி மறைமுகமான பதிலை அளித்துள்ளது. இது தொடர்பான சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள தோனியின் ஓய்வு குறித்து ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கு முன்பும் எதிர்பார்ப்பும், கேள்விகளும் எழுவது வழக்கம். இந்த சூழலில் தற்போதுள்ள தகவலின்படி, ஐபிஎல் 2026 சீசனில் அவர் விளையாடுவார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
44 வயதான தோனிக்கு முழங்கால் வலி போன்ற உடல்நல பிரச்னைகள் இருந்தாலும், ஒவ்வொரு சீசனுக்கும் தன்னை தயார் செய்ய 15% அதிக முயற்சி எடுப்பதாக அவர் முன்னரே தெரிவித்துள்ளார்.
இதனால், 2026 சீசனுடன் அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளதாகவும், அல்லது சீசனின் பாதியிலேயே கூட ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு, அணியின் பொறுப்பை தகுதி வாய்ந்தவரிடம் ஒப்படைப்பார் என்றும் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.
முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் போன்ற சிலர், சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படும் பட்சத்தில், அது தோனியின் ஓய்வு முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் One Last Time என்பதை மோர்ஸ் கோடு வடிவில் குறிப்பிட்டு சென்னை அணி பதில் அளித்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அடுத்த சீசன்தான் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
November 13, 2025 9:04 PM IST


