ட்ராகன் குஜோரியோ கராத்தே இந்தியா சார்பில்கொடைக்கானல் கிரீன் ஹில்ஸ் அரங்கத்தில், தேசிய அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர்.
அந்த வகையில் 15 வயதுக்குப்பட்டோர் ஆண்கள் பிரிவில் தஞ்சையைச் சேர்ந்த சந்தோஷ் ராஜ் கராத்தேவில், கட்டா மற்றும் குமித்தேவில் தேசிய அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.
11 வயதுக்குப்பட்டோர் ஆண்கள் பிரிவில் மகிழன், கராத்தே குமித்தேவில் தேசிய அளவில் முதல் பரிசையும் சிலம்பத்தில் 3ம் பரிசையும் வென்றுள்ளார்.
10 வயதுக்குப்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஹரீஷ் மித்திரன் கராத்தே குமித்தேவில் முதல் பரிசையும் வென்று மாணவர்கள் அசத்தியுள்ளனர்.வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சில்வர் காயின், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)