சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு சொந்தமான 3 வீடுகளை Airbnb – இல் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதால் 175,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சொந்தமான மூன்று வீடுகளும் லிட்டில் இந்தியாவில் உள்ள கிந்தா ரோட்டில் அமைந்துள்ளது. அந்த மூன்று வீடுகளையும் ஜெயந்தி பொன்னுசாமி மணியன்(வயது 52) என்பவர் airbnb தளத்தில் வாடகைக்கு விட்டிருந்தார்.
அந்த மூன்று வீட்டுகள் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடையும்,மற்ற ஐந்து தளத்திலும் வீடுகள் உள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் மூன்று வீடுகளை கிட்டத்தட்ட 489 முறை வாடகைக்கு விட்டுள்ளார்.