அண்ணாமலை கண்டனம்
மதுரையில் போராடிய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழ்நாடு பாஜக மகளிரணி சார்பாக இன்று நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி திருமதி உமாரதி ராஜன், அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சரஸ்வதி அவர்கள், பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் திருமதி குஷ்பு சுந்தர் அவர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.