தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் ரொபின் தம்பதியருக்கு பிறந்த அகிரா, தியோ மற்றும் டுமா ஆகிய மூன்று ஆண் புலிக்குட்டிகளின் இரண்டாவது பிறந்தநாள் மார்ச் 5 ஆம் திகதி செயற்பாட்டு பணிப்பாளர் திருமதி அனோமா பிரியதர்ஷனி உள்ளிட்ட அதிகாரிகளால் கொண்டாடப்பட்டது.
இங்கு வாழை இலையில் சுற்றி மூன்று இறைச்சி பொட்டலங்கள் கொடுத்து கொண்டாட்டம் நடந்தது.
பலர் கலந்து கொண்டனர்
இதன்போது, மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு, கல்வி அதிகாரி நிஹால் செனரத், கால்நடை பராமரிப்பாளர் திரு.திலக் புஸ்பகுமார மற்றும் பார்வையாளர்கள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |